சங்கரதாசு சுவாமிகள்

சங்கரதாசு சுவாமிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
தவத்திரு சங்கரதாசு சுவாமிகள்

தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
பிறப்புசங்கரன்
'செப்டம்பர் 71867
காட்டுநாய்க்கன்பட்டி தூத்துக்குடி மாவட்டம்
இறப்புநவம்பர் 13, 1922 (அகவை 55)
புதுச்சேரி
தொழில்நாடக நடிகர், நாடகாசிரியர்
நாடுஇந்தியர்
கல்விதமிழ் இலக்கியம், இசை. நாடகம்.
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் (செப்டம்பர் 7, 1867 - நவம்பர் 13, 1922) 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்துமரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க (Proscenium) மரபிற்கேற்ப உருபெற்றது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார்.[1]அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பனுவல்களே கிடைத்துள்ளன. புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது சமாதி புதுவை அரசால் பாதுகாக்கப்படுகிறது.

பிறப்பு[தொகு]

சங்கரதாஸ் சுவாமிகள், தூத்துக்குடிக்கு அருகிலுள்ள காட்டுநாய்க்கன்பட்டி என்னும் சிற்றூரில் இராமாயணப் புலவர் என அழைக்கப்பட்ட தாமோதரக் கணக்கப் பிள்ளை[2], பேச்சியம்மாள் இணையருக்கு மகனாக 1867 செப்டம்பர் 7 ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் இவருக்கு சங்கரன் எனப் பெயரிட்டனர்.[3]

கல்வி[தொகு]

தொடக்கக் கல்வி தன் தந்தை தாமோதரனாரிடம் பெற்ற சங்கரதாசர், பின்னர் பழனியில் வாழ்ந்த தண்டபாணி சுவாமிகளிடம் பெற்றார்.[4] சங்க இலக்கியங்கள், நீதிநூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியன போன்றவற்றைக் கற்றார். இதனால் வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்களான வண்ணம். சந்தம் ஆகியவற்றைப் பாடும் திறனைப் பெற்றார்.

கணக்கர்[தொகு]

சங்கரதாசர் தூத்துக்குடி உப்புப் பண்டகசாலையில் சிறிதுகாலம் கணக்கராகப் பணியாற்றினார். 1891 ஆம் ஆண்டில் தனது 24 ஆவது அகவையில் அப்பணியைத் துறந்து நாடகத்துறையில் ஈடுபட்டார்.[5]

துறவு வாழ்க்கை[தொகு]

சாமி நாயுடு குழுவில் பணியாற்றும்பொழுது வாழ்க்கையில் வெறுப்புற்ற சங்கரதாசர் தன் வழிபடு கடவுளாகிய முருகனின் அருள்வேண்டி அருட்செலவு (தீர்த்த யாத்திரை) மேற்கொண்டார். அரையில் மட்டும் உடையுடுத்தி அருட்செலவில் ஈடுபட்ட சங்கரதாசரை பலரும் சுவாமிகள் என அழைக்கத் தொடங்கினர்.[6] இதனால் அவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆனார்.
அருட்செலவின் இறுதியில் புதுக்கோட்டை மகாவித்துவான் கஞ்சிரா மான் பூண்டியா பிள்ளை என்பவருடன் சங்கர்தாசர் தங்கினார். அவர் சங்கரதாசரை தன்னுடைய மகனாக தத்து எடுத்துக்கொண்டார்.[6]

நாடக சபை வாழ்க்கை[தொகு]

ஐயர்கள் நாடக சபை[தொகு]

ராமுடு ஐயர், கல்யாண ராமையர் ஆகிய இருவரும் இணைந்து நடத்திய நாடகசபையில்[7] சேர்ந்து நாடங்களில் நடிக்கத் தொடங்கினார். சனீஸ்வரன், எமன், இராவணன், இரணியன் ஆகியன போன்ற எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் ஆசிரியராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.[5]

சாமி நாயுடு நாடக சபை[தொகு]

பின்னர் சாமி நாயுடு என்பவரின் நாடக சபையில் சங்கரதாசர் சிலகாலம் ஆசிரியராக இருந்தார். அப்பொழுது நாடகத்தின் சூத்திரதாராகவும் நடித்தார்.[6]

நடிப்பதைக் கைவிடுதல்[தொகு]

சங்கரதாசர் சாவித்திரி நாடகத்தில் எமனாக நடித்தபொழுது அந்நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு கர்ப்பம் கலைந்தது, நளதமயந்தி நாடகத்தில் சனீசுவரன் வேடமிட்டு சங்கரதாசர் அதிகாலையில் அவ்வேடத்தைக் கலைக்கச் சென்றபொழுது அவரைக் கண்ட பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்தது என தொடர் துயரங்கள் விளைந்ததால், அவர் நாடகத்தில் நடிப்பதை கைவிட்டார். நாடகம் எழுதுகிற, கற்றுத்தருகிற ஆசிரியப் பணியை மட்டும் தொடர்ந்தார்.[8]

மீண்டும் நாடகப் பணி[தொகு]

மான்பூண்டியா பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கி சங்கரதாசர் மீண்டும் நாடகப்பணியில் ஈடுபட்டார். 'வள்ளி வைத்தியநாதய்யரின் நாடக சபை, அல்லி பரமேசுவர ஐயரின் நாடகசபை ஆகியவற்றில் சிலகாலமும்[9] பி. எசு. வேலு நாயரின் ஷண்முகானந்த சபையில் நெடுங்காலமும் சங்கரதாசர் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.[10]

பாலர் நாடக சபைகள்[தொகு]

சமரச சன்மார்க்க நாடக சபை[தொகு]

நாடகங்களில் நடித்த நடிகர்கள் சங்கரதாசரின் பாடல்களை மட்டும் பயன்படுத்திக்கொண்டு தமது எண்ணத்திற்கேற்ப உரையாடத் தொடங்கினர். இவ்வுரையாடல்கள் தொடர்புடைய நடிகர்கள் தனிப்பட்ட முறையில் குத்திக்காட்டும் சிலேடைக் கூற்றுகளாகவும் மாறத் தொடங்கின. இதனால் நாடகக்கலை நலியத் தொடங்கவே, சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்ட பாலர் நாடக சபையை முதன்முதலாக 1910 ஆம் ஆண்டில் சமரச சன்மார்க்க நாடக சபை என்னும் பெயரில் சங்கரதாசர் தொடங்கினார்.[11]

பால மீன ரஞ்சனி சபை[தொகு]

சிறிதுகாலத்தில் சமரச சன்மார்க்க நாடக சபையைக் கலைத்துவிட்டு, ஜெகந்நாத ஐயரின் பால மீன ரஞ்சனி சபையில் ஆசிரியராக சிலகாலம் இருந்தார்.[12]

தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை[தொகு]

பால மீன ரஞ்சனி சபையிலிருந்து 1918 ஆம் ஆண்டில் கருத்து வேறுபாட்டால் விலகி மதுரைக்கு வந்தார். அங்கே தன் நண்பர்களான சின்னையாபிள்ளை, கருப்பையாபிள்ளை, பழனியாபிள்ளை, சுப்பிரமணியபிள்ளை ஆகிய நால்வரையும் உரிமையாளராகக் கொண்ட தத்துவ மீனலோசனி சபையை உருவாக்கி அதன் ஆசிரியராகத் தனது இறுதிநாள் வரை இருந்தார்.[13]

நாடக ஆசிரியர்[தொகு]

சங்கரதாசர் சுமார் 40 நாடகங்களை எழுதினார். அவற்றுள் தற்பொழுது 18 நாடகங்களின் பனுவல்களே கிடைத்திருக்கின்றன.
VB0003018.jpg

வரிசை எண்நாடகம்ஆண்டுபனுவல் கிடைத்தவை
01அபிமன்யு சுந்தரி1921அபிமன்யு சுந்தரி
02அரிச்சந்திராஅரிச்சந்திரா
03அல்லி அர்ஜூனாஅல்லி சரித்திரம்
04இரணியன்
05இலங்கா தகனம்
06கர்வி பார்ஸ்கர்வி பார்ஸ்
07குலேபகாவலி
08கோவலன் சரித்திரம்1912கோவலன் சரித்திரம்
09சதி அனுசுயாஸதி ஆநுசூயா
10சதிசுலோசனா
11சத்தியவான் சாவித்திரிசத்தியவான் சவித்திரி
12சாரங்கதரன்சாரங்கதரன்
13சிறுத்தொண்டர்
14சீமந்தனிசீமந்தினி நாடகம்
15சுலோசனா சதிசுலோசனா ஸதி
16ஞான சௌந்தரி சரித்திரம்ஞான சௌந்தரி சரித்திரம் [14]
17நல்ல தங்காள்நல்லதங்காள்
18பவளக்கொடிபவளக்கொடி சரித்திரம்
19பாதுகாபட்டாபிசேகம்

Comments

Popular posts from this blog

தமிழ் வளர்த்த தமிழ் அறிஞர்கள்.

எட்டுத்தொகை

பத்துப்பாட்டு